தற்போது தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் அவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி ரசிகர்களுக்கு நல்ல அறிவுரையும் கூறுவார் . இதனாலேயே இவரை இப்போதும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் தற்போது ஒரு ஆன்மீகவாதியாகவும் இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
மேலும் இப்போது தான் ஆன்மிகவாதியாக இருந்து வரும் ரஜினிகாந்த் அப்போது பித்து பிடித்து போய் வேற மாதிரி இருந்திருக்கிறார். அந்த வகையில் அப்போது ரஜினிக்கு இருந்த மிகப்பெரிய ஆசையே கையில் கொஞ்சம் பணம், மூன்று வேளை அசைவ சாப்பாடு,
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்வது போன்றவை தானாம் . ஆனால் புகழ் ரஜினியை விடவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் ரஜினிகாந்த் . இதனால் ரஜினி எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்கின்றனர் .
இதனால் இவரால் நினைத்ததை எதையுமே சரியாக செய்ய முடியவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் பித்து பிடித்து போய் வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் உடைத்து வீட்டையே ரெண்டாக மாற்றி விட்டாராம் ரஜினிகாந்த் . இவருடைய திடீர் நடவடிக்கையை பார்த்து பயந்து போன,
லதா இயக்குனர் பாலச்சந்தரிடம் சொல்லி இருக்கிறார் . இதன் பிறகு இயக்குனர் பாலச்சந்தர் ரஜினியிடம் அறிவுரை கூறியிருக்கிறார் . இயக்குனர் பாலச்சந்தர் அறிவுரை சொல்லிய பிறகு தான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாராம் சூப்பர் ஸ்டார் …