கடந்த வாரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், அழகம்பெருமாள் ,கீதா கைலாசம் ,லால், விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . குறிப்பாக இந்த படத்தில்,
அனைவரும் சமம் என்ற கருத்தை முன்வைத்து எடுத்திருந்தார்கள் . ஆனால் அதற்கு முன்மாதிரியாக இருக்கும் நடிகர்களே தற்போது அதற்கு எதிராக உள்ளனர் . அந்த வகையில் மாமன்னன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வடிவேலுவின் வீட்டிற்கு உதயநிதியும் மாரி செல்வராஜூம் சென்றுள்ளனர்.
அப்போது உதயநிதியை சோபாவில் உட்கார வைத்த வடிவேலு , மாரி செல்வராஜை சேரில் தான் உட்கார வைத்திருந்தார் . அப்படி படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசிய இவர்களே இப்படி செய்தது தற்போது நெட்டிசன்களின் கேள்விக்கு ஆளாகியுள்ளது . இதை பார்த்த பலரும் இந்த நிலை மாறனும் என்று கலாய்த்து தள்ளி வருகின்றனர்…