தற்போது தமிழ் சினிமா உலகில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் இவருக்கு முன்பே நடிக்க வந்த விமல் இன்னும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியாமல் போராடி வருகிறார் . இதற்கு காரணம் என்னவென்றால் சிவகார்த்திகேயனுக்கு முன்னாடியே பசங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் விமல் . இதன் பிறகு தொடர்ச்சியாக ,
பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . அந்த நேரத்தில்தான் சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் ,
ஒன்றாக நடித்திருந்தனர். அந்த நேரத்தில் சிவகார்த்திகேயனை விட அதிக ரசிகர் பட்டாளம் விமலுக்கு தான் இருந்ததாம். அதன் பிறகு விமல் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு ,
சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்த எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் பிறகு ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தாலும் அடுத்த படங்களில் அதை சரி செய்து வருகிறார் சிவகார்த்திகேயன் .
அப்படி சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான் சிவகார்த்திகேயன் இப்போது தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் . மேலும் நடிகர் விமலும் இவரைப் போன்றே செய்திருந்தால் அவரும் ஒரு தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருந்திருப்பார் என்று கூறப்படுகிறது…