May 1, 2024

அட்லீ போல ஒரு கணவர் எல்லா பெண்களுக்கும் அமையனும் ..!! கணவரை புகழ்ந்து தள்ளிய மனைவி ..!!

தற்போது தமிழ் சினிமாவில் இருந்து இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் அட்லீ .ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ  கடந்த 2013 ஆம் ஆண்டு ஆர்யா, ஜெய் நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை ,

பதித்த அட்லீ  தொடர்ந்து தெறி ,மெர்சல், பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார்.  இதன் பிறகு சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் அட்லீ .  இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமில்லாமல்,

ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனிடையே பிரபல தமிழ் நடிகையான கிருஷ்ண பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அட்லீ . திருமணமான இவர்களுக்கு சமீபத்தில் தான் ஒரு மகன் பிறந்தார் . இப்படி இருக்கும் நிலையில்,

தன்னுடைய கணவர் குறித்து கிருஷ்ண பிரியா கூறியதாவது , அட்லீ அவர்களுடைய பெற்றோர்களுக்கு நல்ல மகன் ,என்னுடைய பெற்றோர்களுக்கு நல்ல மருமகனாக இருக்கிறார் . மேலும் எனக்கும் ஒரு சிறந்த கணவராக இருக்கிறார் அட்லீ .

இன்னும் சொல்லப்போனால் எல்லா பெண்களுக்குமே அட்லீ போல ஒரு கணவர் வேண்டும் என்று தான் சொல்லுவேன்.  அதோடு என்னுடைய மகனுக்கும் ஒரு மிகச்சிறந்த தந்தையாக இருக்கிறார் என்று உருக்கமாக கூறியிருந்தார் நடிகை கிருஷ்ண பிரியா  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *