நல்ல மனிதர்களுக்கு காலமில்லை என்று சொல்வது போல கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . மேலும் ஆரம்பத்தில் இவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்த நிலையில் ,கடந்த சில தினங்களுக்கு முன்பு,
சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . இதன் பிறகு கேப்டன் நன்றாக தான் இருக்கிறார் என்று அவருடைய மனைவியான பிரேமலதா கூறியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தின் உடல் நிலையில்,
மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் நடிகர் சங்கத் தலைவரான நாசர் , பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது…