மாரிமுத்து ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து புலிவால் என்ற படத்தை இயக்கியிருந்தார் . இதன் பிறகு இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர,
நடிகராகவே மாறிவிட்டார் நடிகர் மாரிமுத்து . அந்த வகையில் பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வந்தார் நடிகர் மாரிமுத்து . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்,
எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். குறிப்பாக சினிமாவில் கிடைக்காத பெயர் புகழ் எல்லாம் இவருக்கு சீரியலில் கிடைத்து வருகிறது . இதனிடையே திருமணமான மாரிமுத்துக்கு,
ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் நன்றாக இருந்த மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 57 தான் . இவரின் திடீர் மறைவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…