April 29, 2024

ரஜினிக்கு அந்த பதவி தேடி வரும் ..!! பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டாரின் அண்ணன் ..!! வெளியான லேட்டஸ்ட் தகவல் ..!!

அப்போது முதல் இப்போது வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் . அப்படி சில வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை . திடீரென மனசு மாறி அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் . இப்படி இருக்கும் நிலையில்,

ஜெயிலர்  படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் ஆன்மீகப் பயணம் சென்று இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அப்படி அந்த பயணத்தை முடித்த ரஜினி வரும் வழியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது,

மட்டுமல்லாமல் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்.  இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்ற பேசிய ரஜினியின் அண்ணன்  சத்ய நாராயணராவ் கூறியதாவது , ரஜினி இனிமேல்,

அரசியலுக்கே வரமாட்டார் . ஆனால் இறைவனின் அருளால் அவருக்கு ஆளுநர் பதவி கூட கிடைக்கலாம் என்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் சூப்பர் ஸ்டாரின் அண்ணன் சத்ய நாராயணராவ் . குறிப்பாக ரஜினிக்கு வயசு ஆகிவிட்டதால் ஒரு சில படங்கள் மட்டுமே,

நடித்துவிட்டு ஆளுநர் பதவியில் அமரலாம் என்று திட்டம் போட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *