தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் இன்று இந்திய சினிமாவையே வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். என்னதான் இவர் சினிமாவில் ஒரு நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தாலும் அவ்வப்போது கிசுகிசுவில் சிக்கி பல சர்ச்சைகளிலும் சிக்கினார் . அப்படி வாணி ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்ட,
கமல்ஹாசன் சில வருடங்களிலேயே அவரைப் பிரிந்து பின்னர் நடிகை சரிதாவை திருமணம் செய்து கொண்டார் . இதன் பிறகு சரிகாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை கௌதமியுடன் உறவில் இருந்து வந்தார் கமல்ஹாசன். தற்போது அவரையும் பிரிந்து விட்டார்.
இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய அன்பு காதலி அந்த நடிகை தான் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீவித்யா தான் . அந்த வகையில் ஸ்ரீவித்யாவும், கமலும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தனர் . அப்போதிலிருந்தே,
இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் எழுந்தது. ஆனால் அது உண்மை தானாம். இதற்கு ஸ்ரீவித்யாவின் அம்மா சம்மதம் தெரிவிக்காததால் தான் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது . இதன் பிறகு கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்துவிட்டார் நடிகை ஸ்ரீவித்யா .
அப்போது கூட கடைசியாக கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார் . இந்நிலையில் தொகுப்பாளினி டிடியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் , ஸ்ரீவித்யா தான் என்னுடைய அன்பு காதலி , அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்…