விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒவ்வொரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அப்படி ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி . கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது . இதை அடுத்து ஏழாவது சீசன் ப்ரோமோ சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள்,
என்று ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்தில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இந்த முறை நான்கு நடிகைகள் பிக் பாஸில் களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளி னியும் நடிகை யுமான ஜாக்குலின் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறாராம்.
இவரை தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வரும் நடிகை நட்சத்திர நாகேஷ் பிக் பாஸுக்கு வர இருக்கிறாராம் .இவரைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரட்டி வந்த நடிகை பரீனாவும் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளாராம் .
கடைசியாக ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை வி ஜே அர்ச்சனாவும் போட்டியாளராக பிக் பாஸில் கலந்து கொண்டுள்ளாராம் . இதில் நடிகை நட்சத்திரவை தவிர மீதியுள்ள மூன்று நடிகைகளும் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
இதனால் பிக் பாஸ் செவனில் இவர்களால் மிகப்பெரிய சம்பவம் நடக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டிஆர்பிக்காக விஜய் தொலைக்காட்சி பார்த்து பார்த்து போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…