தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நடிகராகவும் , நல்ல மனிதராகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . பிறப்பால் பணக்கார வீட்டுப் பிள்ளையாக பிறந்த விஜயகாந்த் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தார் . ஆனால் இவருக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பல அவமானங்கள் கஷ்டங்களை தாண்டி தான் இனிக்கும் இளமை என்ற ,
படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயகாந்த் . இருந்தாலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் ,அம்மன் கோவில் கிழக்காலே ,கூலிக்காரன்,
உழவன் மகன் ,பூந்தோட்ட காவல்காரன் , செந்தூரப்பூவே போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் .மேலும் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் விஜயகாந்த் இதுவரை தமிழ் மொழியை தாண்டி மற்ற மொழி படங்களில் நடித்ததில்லை ,
என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இவர் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் வைத்திருந்த அன்பு ஒப்பற்றது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நல்ல கலைஞனாகவும், நல்ல மனிதராகவும் வாழ்ந்த கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…