ஜெயம் ரவி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . தொடர்ந்து ஜெயம் ரவி தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி ஆரம்பத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பிரபலமான ஜெயம் ரவிக்கு தற்போது எந்த ஒரு படங்களும் கை கொடுக்காமல் இருப்பதுதான் சோகமான விஷயமே .
மேலும் கோமாளி படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் ஓடவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் அது மல்டி ஸ்டார் படமாகும் . ஆனால் சமீப காலமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி, அகிலன் ,
இறைவன் போன்ற படங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது தான் மிச்சம். இதற்கெல்லாம் காரணம் ஜெயம் ரவி அவருடைய மாமியாரை கண்மூடித்தனமாக நம்பியது தானாம் . அந்த வகையில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தியின் அம்மா தான்,
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார். ஜெயம் ரவிக்கு யாராவது ஒரு இயக்குனர் கதை சொல்ல வந்தால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது வேறு கதையை கொண்டு வாருங்கள் என்று அந்த இயக்குனரை திருப்பி அனுப்பி வைத்து விடுகிறாராம் . இதனாலேயே ஒரு சில,
இயக்குனர்கள் கதை சொல்வதற்கே தயங்குகிறார்களாம் . இந்த காரணத்தினால் மொக்கை கதைகளுக்கு ஓகே சொல்லி மொக்கை வாங்கி வருகிறார் ஜெயம் ரவி. இப்படியே மாமியார் சொல்லே மந்திரம் என்று இருந்து வந்தால் ஜெயம் ரவியின் கேரியரே கிளோஸ் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது…