ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சௌந்தர்யா. கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் சௌந்தர்யா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அருணாச்சலம், காதலா காதலா ,மன்னவரு சின்னவரு ,படையப்பா, தவசி, சொக்க தங்கம் ,
போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக இவர் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,கமல், விஜயகாந்த், சத்யராஜ் ,கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் கொடிகட்டி பறந்து வந்தார் . இப்படி எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு வந்த சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது . அந்த வகையில் அப்போது பாஜகவில்,
இணைந்த சௌந்தர்யா பிரசாரம் செய்வதற்காக விமானத்தில் பெங்களூரு சென்று இருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டார் சௌந்தர்யா. அப்படி இறக்கும்போது சௌந்தர்யா 7 மாத கர்ப்பமாக இருந்தாராம்.இருந்தாலும் அவருடைய கடைசி ஆசை,
நிறைவேறவே இல்லையாம் . அது என்னவென்றால் கடைசியாக விமானத்தில் செல்வதற்கு முன் காட்டன் புடவையும், குங்குமமும் தருமாறு கேட்டாராம் . ஆனால் அதன் பிறகு அவர் திரும்பவே வரவில்லை என்று கூறியிருந்தார் சௌந்தர்யாவின் சகோதரனின் மனைவி…