முத்தம் கொடுத்து விட்டு பிறகு மன்னிப்பு கேட்ட நாக சைதன்யா ..?? பேட்டியில் மனம் திறந்த பேசிய நடிகை தக்ஷா நகர்கர் ..?? சோசியல் மீடியாவில் வைரலாகும் காட்சி உள்ளே..!!
சமீபகாலமாக நாக சைதன்யா குறித்த பல செய்திகள் வெளியாவதை காணமுடிகிறது. அந்த வகையில் தற்போது டோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை தக்ஷா நகர்கர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராவணசூரா’ படத்தின்
நேர்காணல் ஒன்றில் தான் 2022 இல் பாங்கர்ராஜூ படத்தில் நாக சைதன்யாவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பேசினார். அதில் ” பெண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு இனிமையான மற்றும் எளிமையான மனிதர் நாகசைதன்யா என்று அவர் பாராட்டினார். மேலும், நாக சைதன்யா அவர்கள் ஒரு காட்சியில்
முத்தமிடவோ அல்லது கட்டிப்பிடிக்கவோ நேரும்போதெல்லாம் மன்னிப்பு கேட்பார், அது அவரது மரியாதைக்குரிய தன்மை அது” என புகழாரம் சூட்டினார் . கல்யாண் கிருஷ்ணா குராசாலா இயக்கத்தில் தயாரான இந்த படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும்
ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தனர். நாகர்ஜுனா, ரம்யா கிருஷ்ணன், அமலா அக்கினேனி ஆகியோரும் நடித்திருந்த இப்படத்தில் நாக சைதன்யா ஒரு சிறிய பாத்திரம் மற்றும் ஒரு பாடலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.