காதல் தோல்வியால் தலைக்காட்டாத பாக்யராஜின் மகள் சரண்யா..?? சினிமாவைவிட்டு விலகி ஆன்லைன் தொழிலை செய்து வருகிறாரா..?? 38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருக்கிறாரா..??
இயக்குனராகவும் கதை திரைக்கதை வசன கர்த்தாவில் மிகவும் கைத்தேர்ந்தவர் என்று புகழப்படுபவர் இயக்குனர் பாக்யராஜ். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார்.
சாந்தனு ஆரம்பித்த சினிமா வாழ்க்கையை போன்று சரண்யாவிற்கு சினிமா வாழ்க்கை எடுபடவில்லை. ஒருசில படங்களில் நடித்த சரண்யா வெளிநாட்டில் படத்த போது காதலர் ஏமாற்றிவிட்டதால் தற்கொலை முயற்சி செய்தார்.
ஒருமுறை அல்ல பல முறை தற்கொலை முயற்சி செய்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் ஆறுதல் படுத்தி காப்பாற்றினர். இதனால் வெளியில் தலைக்காட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு வந்தார் சரண்யா.
38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் தான் இருந்து வருகிறார். தற்போது எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்து வரும் சரண்யா, ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை செய்து வருகிறார்.
சினிமாவைவிட்டு விலகி பெண்கள் ஆடையணிகலன்கள் சம்பந்தமான விசயத்தை செய்து நாட்களை கழித்து வருகிறார். மேலும் , இதற்கிடையில் ஹன்சிகாவின் 51வது படத்தில் ஸ்கிரீன்பிளே பணியை செய்து வருகிறாராம்.