இவங்கள தவிர இந்த வில்லன் ரோலில் யாராலும் நடிக்க முடியாது..?? அதுலயும் இந்த நடிகர் தான் டாப்..?? இவர் பேசிய வசனங்கள் இன்றளவும் பிரபலம் தான்..!! நடிகரின் புகைப்படம் உள்ளே ..!!
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு வில்லன் கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிலும் சினிமா துறையில் வில்லன் என்றால் இவர்கள்தான் என்று பெயர் பெற்றவர்களும் உண்டு. அப்படியாக இவர்கள் நடித்த படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் வேறு எந்த ஒரு நடிகராலும் , அந்த அளவிற்கு கனகச்சிதமாக நடிக்க முடியாது என நிரூபித்த ஹீரோக்கள்.
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் அமைதிப்படை. இப்படத்தில் அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் விதத்தில், சத்யராஜ் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் அரசியலை கற்றுத்தந்த மணிவண்ணனையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு கெத்தாக நடித்திருப்பார்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1990 ஆம் ஆ ண்டு வெளியான திரைப்படம் தான் புரியாத புதிர். இதில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ரகுவரன் மனைவியை சந்தேகப்படும் கொடூர வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் இப்படத்தில் ரகுவரன் பேசிய வசனங்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் மங்காத்தா. இதில் அஜித் உடன் த்ரிஷா, அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்து பணம் விஷயத்தில் பல தில்லு முல்லு வேலைகளை செய்யும் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருப்பார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு கமல் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். இதில் அண்ணன் மற்றும் தம்பி என இரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் தம்பி கேரக்டரில் நந்தகுமார் என்னும் சைக்கோ கொலையாளியாக தனது உடல் அமைப்பை மாற்றி மிரள விட்டிருப்பார்.