விஜயின் இந்த படத்தை பார்த்து தியேட்டர்களில் தூங்கிய ரசிகர்கள் ..?? அட இந்த படத்த பாத்தா தூங்கிடாங்கா..?? என்ன படனும் தெரியுமா..??
விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள் .
2006 ஆம் ஆண்டு ரமணா இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான ஆதி திரைப்படம் ஆக்சன் கலந்த குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தது. இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்ததுடன் கலவையான விமர்சனத்தையும் பெற்றது. ஏனென்றால் அந்த சமயத்தில் விஜய்யின்
நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தாறுமாறாக வசூல் வேட்டையாடிய நிலையில், ஆதி படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆகுவது போலவே தோன்றியது. சுறா: விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே படு தோல்வி படம் என்றால் அது சுறா தான். 2010 ஆம் ஆண்டு எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம்
அஜித்தின் 50 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைப் பார்த்த பிறகு, விஜய் எப்படி இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருப்பார் என்ற குழப்பம் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. ஏனென்றால் அந்த அளவிற்கு படத்தின் கதையில் சுவாரசியம் சுத்தமாகவே இல்லை. இந்தப் படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 80 முதல் 100 சதவீதம்
நஷ்டம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்யின் படத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே காசு கொடுத்து தியேட்டரில் வந்து உறங்கி விட்டு சென்றனர். புலி: 2 015 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான புலி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான
விமர்சனத்தை பெற்றது. படத்தில் தவளை போன்ற விலங்குகள் பேசுவது போன்றும், படத்தில் இடம் பெற்ற குள்ள மனிதர்கள் என கார்ட்டூன் படத்தில் இருப்பது போல் இந்த படத்தை எடுத்திருப்பார்கள். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என விஜய் இந்த படத்தில் நடித்து படு தோல்வியை சந்தித்தார்.